ஆரணியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு

1 Min Read

ஆரணி, அக். 20- ஆரணி நகர கழகத் தலை வர் ஏ.அசோகன் தலைமையில் அவரது இல்லத்தில் 18.10.2023 அன்று காலை கழகப்பொறுப்பாளர்களின் கலந்துரை யாடல் நடைபெற்றது. 

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையா டலில்  கருத்துரை வழங்கினார். 

செய் யாறு மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலைவர்  வெங்கட்ராமன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருட்டிணன், உரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் த.செகனாதன், ஒக்கநாடு மேலையூர் கா.விக்னேசு உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

காமாட்சி அசோகன் அவர்கள் அனை வருக்கும் தேனீர் வழங்கி சிறப்பித்தார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைத்து ஆரணியில் மாபெரும் பொதுக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *