29.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜன நாயகம் அழிந்து விடும். சர்வாதிகார மோடி ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நாக்பூரில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* வைக்கம் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2024 மக்களவை தேர்தல் “தேசத்தின் தலைவிதியை” தீர்மானிக்கும் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட வேண்டும் என சாம் பிட் ரோடா எச்சரிக்கை. நீதிபதி லோகூர் தலைமையிலான அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காங்கிரஸின் 139ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ஒன்றியத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத் தப்படும் என அறிவித்தார். ஆர்எஸ்எஸ் வழிகாட்டுத லில் இயங்கும் பாஜவை வீழ்த்தி மக்களவைத் தேர்தலில் மாபெ ரும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.
*பொதுக்கூட்டத்தில் மராத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்த மணிப் பூருக்கு செல்லாத பிரதமர் மோடி, வைர வியாபாரத்தை தொடங்க சூரத்துக்கு செல்கிறார்.
* கருநாடகத்தில் கடைகளில் கன்னடப் பெயர்ப் பலகைகள் கட்டாயம் எனும் அரசாணை விரைவில் வெளியிடப்படும், முதலமைச்சர் சித்தாராமைய்யா அறிவிப்பு.
தி டெலிகிராப்:
* பாஜக திருடர்களின் கட்சி என மம்தா பகிரங்க குற்றச்சாட்டு. காவி முகாமுக்கு எதிராக இது போன்ற பிரச் சாரத்தை உருவாக்க கட்சியினருக்கு அறிவுறுத்தல்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment