தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலிவு காரணமாக காலமானதை முன்னிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கோயம்பேடு அலுவலகத்திற்கு நேற்று (28.12.2023) சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்தார். விஜயகாந்த் மகன் விஜய. பிரபாகரனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.