செய்யாறில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் – சிறப்பு பொதுக்கூட்டம்

viduthalai
1 Min Read

செய்யாறு, டிச.28-_- செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் அய் யாவின் இறுதி முழக்கம் (டிச.19), அய்யாவின் நினைவு நாள் (டிச.24) பொதுக்கூட்டம் பிரமாண்ட மேடை, சுமார் 1 கிலோ மீட்டருக்கு கழக கொடிக்காடு கட்டப்பட்டு கூட்டம் அல்ல – மாநாடு போல் நடைபெற்றது.
சரியாக மாலை 6:30 மணிக்கு மாவட்ட தலைவர் அ.இளங் கோவன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. செய்யாறு நகரத் தலைவர் தி.காமராசன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர், பகுத் தறிவாளர் கழக பொறுப்பாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமை உரை யாற்றினார். டி.சின்னதுரை, என்.வி.கோவிந்தன், முபாரக் ஆகியோரின் உரையை அடுத்து தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் உரையாற்றினார்.
தி.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளர் தக்கோலம் தேவ பாலன் உரைக்குப் பிறகு திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப் பான உரையை நிகழ்த்தினார்.
கூட்டத்தின்போது இரு மருங்கிலும் மாநாடு போல் மக்கள் ஆர்வமாக உரைகளை செவி மெடுத்தனர். ஏராளமான கழகத் தோழர்கள், மாணவர் கழக, இளை ஞரணியினர் திரண்டிருந்தனர். இறுதி யாக தங்கம் கே.பெருமாள் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *