ஈரோடு, டிச.28 ஈரோடு மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் பூவழகன், (37). இவர், ஈரோடு காவல் கண் காணிப்பாளர் ஜவகரிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ள தாவது: எம்.ஏ., தமிழ் பட்டதாரியான எனக்கு, 2014இல், கவுந்தப்பாடி அய்யன் காட்டை சேர்ந்த பரம்பரை ஜோதிடரான அன்பானந்தன், 53, கோகிலாம்பாள் இணையரிடம் பழக்கம் ஏற் பட்டது. தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தனக்கு வாடிக்கையாளர் களாக உள்ளனர் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் அன்பானந்தன் கூறினார். இதை நம்பி, 2019இல் கவுந்தப்பாடியில் உள்ள வீட்டில் ரொக்கமாக, 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இதுவரை வேலை வாங்கி தரவில்லை. அதுபோல, பலரி டம் 30 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவ லர்கள், ஜோதிடர் அன்பானந்தனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவி கோகிலாம் பாளை தேடி வருகின்றனர்.