மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

1 Min Read

புதுடில்லி,டிச.28- இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இக்ரா’வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:தங்களுக்குத் தேவை யான நிதியை திரட்டுவதற்காக மாநில அரசுகள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களின் ஏலம் 26.12.2023 அன்று நடைபெற்றது.இதில் அந்த கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 7.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 2 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். 26.12.2023 அன்று நடந்த கடந்த வாரத்துக்கான ஏலத்தில், நாட்டின் 11 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை (எஸ்ஜிஎஸ்) வெளியிட்டதன் மூலம் ரூ.20,800 கோடி திரட்டின. இது, அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே நிர்ணயித்திருந்த இலக்கை விட 27 சதவீதம் குறைவாகும். அவற்றுக்கான சராசரி வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *