மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

viduthalai
1 Min Read

புதுடில்லி,டிச.28- இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இக்ரா’வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:தங்களுக்குத் தேவை யான நிதியை திரட்டுவதற்காக மாநில அரசுகள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களின் ஏலம் 26.12.2023 அன்று நடைபெற்றது.இதில் அந்த கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 7.63 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 2 அடிப்படைப் புள்ளிகள் அதிகமாகும். 26.12.2023 அன்று நடந்த கடந்த வாரத்துக்கான ஏலத்தில், நாட்டின் 11 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை (எஸ்ஜிஎஸ்) வெளியிட்டதன் மூலம் ரூ.20,800 கோடி திரட்டின. இது, அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே நிர்ணயித்திருந்த இலக்கை விட 27 சதவீதம் குறைவாகும். அவற்றுக்கான சராசரி வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *