சிதம்பரம் கோயில் கனகசபையில் ஏறி சாமி கும்பிட விடாமல் தடை செய்த தீட்சிதர்கள்மீது காவல்துறையில் புகார்

viduthalai
2 Min Read

கடலூர், டிச.27 சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை என்ற மேடையிலிருந்து சாமி கும்பிட தீட்சிதர்கள் தடை செய்து வந்தனர். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை பணி செய்யவிடவில்லை என்று தீட்சி தர்கள் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.25 முதல் 28-ஆம் தேதி வரை கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் கனகசபையின் கதவுகளை மூடியுள் ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சந்திரன் தலைமையில் சிதம்பரம் திருக்கோயில்களின் வட்டார ஆய்வாளர் நரசிங்க பெருமாள், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் காவல்துறையினர் பாதுகாப் புடன் கோவிலின் பொது தீட்சிதர் களிடம் அரசாணையின்படி கனகசபை யில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி பேசினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தடை ஆணை பெறப்பட்டுள்ளதாகவும், இந்த நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
அப்படியானால் நீதிமன்ற தடை ஆணையை கொடுங்கள் என இந்து சமய அறநிலையத் துறையினர் தீட்சீதர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க முடியாது எனவும் பக்தர் களை வழக்கம் போல் கனகசபையில் ஏறி சாமி கும்பிடவும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்றனர்.

இந்த நிலையில்,சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதில், ‘சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி கும்பிட அரசாணைப்படி மக்கள் அனுமதிக்கப் படுகிறார்களா என்று கண்காணிப்புப் பணியில் நானும், இந்து அறநிலையத் துறை சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாளும் இருந்தோம். மதியம் சிலர் கனகசபையின் படியில் நின்று கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். நாங்கள் அவர்களிடம் சென்று விசாரித்த போது, தீட்சிதர்கள் இன்று (டிச.25) முதல் 28ம் தேதி வரை பக்தர்களுக்கு கனகசபையில் ஏறி சாமி கும்பிட அனுமதியில்லை என்று தெரிவித்தாக கூறினர். இதனை தொடர்ந்து நானும், சரக ஆய்வாளரும் பொது தீட்சிதர்களிடம் இது குறித்து கேட்ட போது நீதிமன்ற ஆணை உள்ளது என்று கூறிய அவர்கள் நீதிமன்ற ஆணையை காட்டவில்லை. மேலும் எங்களது வழக்குரைஞரை கேட்டு சொல்கிறோம் என்று அலட்சியமாக பேசினர். அரசுப் பணி செய்ய விடாமல் எங்களைத் தடுத்து, மிரட்டும் தோர ணையில் பேசிய 5-க்கும் மேற்பட்ட தீட்சிகள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டி ருந்தது.காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *