சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு காரணமாக கைது

viduthalai
1 Min Read

சேலம், டிச. 27- பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள் வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன் படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டே அந்த நிறு வனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாக பயன் படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, துணைவேந்தர் ஜெக நாதனை கருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் மீது மேலும் சில புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீதும் வழக்குகள் பதிவு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், வழக்கு விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *