கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

26.12.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
• பிரதமர் வேட்பாளராக கார்கேவின் பெயரை பரிந்துரை செய்ததில் தனக்கு அதிருப்தி இல்லை; பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்பது மட்டுமே தன் விருப்பம் என்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்
• மாநிலங்களவை தலைவர் தன்னை நேரில் சந்திக்க விடுத்த அழைப்பை நிராகரித்தார் மல்லிகார்ஜூன கார்கே.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• மாயாவதி தலைமையிலான பி.எஸ்.பி. கட்சியின் ஒரு பிரிவினர் இந்தியா கூட்டணியில் சேர வேண்டும்; இல்லை யென்றால் கட்சி பெரும் சரிவை மேற்கொள்ளும் என எச்சரிக்கை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
• குற்றவியல் சட்டத்தின் சரியான செயல்முறையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் “சுதந்திரம்” மற்றும் “தனிப்பட்ட சுதந்திரம்” ஆகியவற்றைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளன என ப.சிதம்பரம் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:
• இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என அறிவிக்க தேவையில்லை என சரத் பவார் பேட்டி.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *