செங்கல்பட்டு ரயில் நிலைய நுழைவு வாயிலில் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவர் அ.கோ.கோபால்சாமி வைத்த தந்தை பெரியார் படம் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்களால் புதுப்பிக்கப்பட்டது.
21.12.2023 அன்று மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், மாவட்ட செயலாளர் அ. செம்பியன், மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மு.அருண், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோத், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சிவகுமார், வள்ளுவர் மன்ற செயலாளர் மா.சமத்துவமணி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவர் ம.நரசிம்மன், மறைமலைநகர் செயலாளர் ப.முருகன், நகர அமைப்பாளர் செ.முடியரசன், ,அறிவு ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மகளிரணி தலைவர் சு.ஆனந்தி தலைமையில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அவர்கள் திறந்து வைத்தார்.
தந்தை பெரியார் படத்தினை இரயில் நிலைய நுழைவு வாயிலில் திறந்திட செங்கல்பட்டு ஷிஸிவிஹி கிளை தலைவர் சக்திவேல் தலைமையில் தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர். பெரிய அளவிலான தந்தை பெரியார் படத்தை பொருத்திக் கொடுத்தனர்.