மழை பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டணம் இன்றி நகல் சான்றிதழ்

viduthalai
1 Min Read

சென்னை, டிச 24 தென் மாவட் டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாண விகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையால் பாதிக் கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் சான் றிதழ் நகல் கட்டணமின்றி வழங் கப்படும்.
சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தாங்கள் படித்து வரும் பள்ளிகளில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணமின்றி சான்றி தழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *