முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2023) தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், மேனாள் உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.