சங்கராபுரம் இராம.நாராயணனுக்கு இரங்கல்!

1 Min Read

சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழக செயலாளரும், பொதுநலப் பணி சேவகரும், திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் தவறாது கலந்து கொண்டவரும், சிறு கனூர் பெரியார் உலகத்திற்கு நன் கொடை ரூ.25,000 வழங்கியவருமான ரோட்டரி இராம.நாராயணன் நேற்று (22.12.2023) இரவு 9.30 மணிக்குத் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத் தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
திராவிடர் கழகம்
சென்னை
23.12.2023
தோழர்கள் இறுதி மரியாதை
மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் ம.சுப்பராயன், சங்கை நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர்
ஆ.இலட்சுமிபதி, கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் அ.கரிகாலன், இரிசிவந்தியம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் அர.சண்முகம்,சங்கை நகர திராவிடர் கழகத் தலைவர் கலை அன்பரசு; செயலாளர் ஜி.கபூர் ஆகியோர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *