காங்கேயத்தில் 150 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்

2 Min Read

காங்கேயம்,டிச.23- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி பட்டறை காங்கேயம் ரி.க்ஷி.அய்யாவு திருமண அரங்கில் இன்று (23-12-.2023) சனிக்கிழமை 150 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் தொடங்கியது.

திராவிடர் கழகம்

காங்கேயம் நகர செயலாளர் பெ.மணி வேல் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் திராவிடர் கழகத் தின் முதல் பொருளாளர் பழைய கோட்டை அர்ஜுனன் படத்தினை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்
தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில செய லாளர் கார்திகேய சிவசேனாதிபதி பெரியா ரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் முத்து.முருகேசன் தலைமையேற்று உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டத்தலைவர் யாழ்.ஆறுச்சாமி தொடகவுரையாற்றினார்

தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட செயலாளர் குமரவேல், பகுத்தறிவார்கழக மாவட்ட அமைப்பாளர் நன்னிலம் நாகராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு. கிருஷ்ணவேணி, பல்லடம் இளங்கோவன், சூலூர் தேவராஜ், தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ. தமிழ்ச் செல்வன், காங்கேயம் பகுத்தறிவாள கழக பொறுப்பாளர் சின்னச்சாமி, ஈரோடு மாவட்ட காப்பாளர் சிவகிரி சண்முகம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்
திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செய லாளர் பத்மநாதன், புரட்சிகர முன்னணி பொறுப்பாளர் கவி,புரட்சிகர, பெரியார் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் கனி மொழி, பேராசிரியர் சரண்யாதேவி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திராவிடர் கழகம்

பேராசிரியர் ப.காளிமுத்து தந்தை ‘பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
“பேயாடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில் மருத்துவர் குன்னூர் இரா.கவுதமன் வகுப்பெடுத்தார்
திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்ப ழகன் “பார்ப்பன பண்பாட்டு படையெ டுப்புகள்” என்ற தலைப்பிலும், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னரெசு பெரியார் “பெரியாரின் பெண் ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், முனைவர் அதிரடி க.அன்பழகன் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பிலும், புரபசர் ஈட்டி கணேசன் “மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பிலும் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *