திராவிடர் இயக்கச் செம்மல் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் – வீர வணக்கம்

1 Min Read

அரசியல்

திருவள்ளூர் மாவட்ட திராவிட முன் னேற்றக் கழக மேனாள் செயலாளரும், மேனாள் சட்டப் பேரவை உறுப் பினரும், இந்நாள் உயர் நிலை செயல் திட்டக் குழுவின் உறுப்பினரு மான கொள்கை வீரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்கள் நேற்று இரவு (20.10.2023) உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

தோழர் கி.வேணு அவர்கள் சிறந்த கொள்கை வீரர் – திராவிட இயக்கத் தீரர்களில் ஒருவர். ‘மிசா’ காலத்தில் எங்களோடு சென்னை மத்திய சிறைச் சாலையில் இருந்தவர். தி.மு.க.விடம் எப்படி முழு ஈடுபாட்டுடன் இறுதிவரை பணியாற்றி னாரோ, அதே பாசத்துடன் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தையும், நம்மையும் நேசித்தவர்.

அப்பகுதி நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்கத் தவறாதவர்.

அவரது இறப்பு, திராவிடர் இயக்கத்திற்கு மாபெரும் இழப்பு – அவர் குடும்பத்திற்கு மட்டு மல்ல – அவரை இழந்து வருந்தும் அவரது  இயக்க குடும்பத்தினர்  அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலையும் மறைந்த வருக்கு நமது வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
21.10.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *