பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-155, இராமாபுரம் பிரதான சாலையில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு சிறீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேற்று (22.12.2023) அரிசி, ரொட்டி மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா.கணபதி, துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.