சி.பி.எம். மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பதா?

Viduthalai
5 Min Read

ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்!

அரசியல்

சென்னை,அக்.21- சிபிஅய்(எம்) கட்சியின் தமிழ்நாடுமாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாட்டின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரான என்.சங்கரய்யா, மதுரை அமெரிக் கன் கல்லூரியில் படித்துக் கொண் டிருக்கும்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 

படிப்பை தொடர்வதா, விடுத லைப் போராட்டத்தில் சிறைக்கு செல்வதா என்ற கேள்வி எழுந்த போது விடுதலைப் போராட்டத் தில் கலந்து கொள்வதையே தேர்வு செய்தார்; அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்மூலம் பல்கலைக்கழக தேர்வு எழுதுகிற வாய்பையும் இழந்து படிப்பையும் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தோழர் என்.சங்கரய்யா விடு தலைப் போராட்ட களத்திலும், இன்றுவரை அரசியல் களத்திலும் மக்கள் நலனை முன்னிறுத்திப் போராடி வரும் ஆளுமையாவார். அவரின் மகத்தான தியாக வர லாற்றை இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளரான சாய்நாத் தமது ‘விடுதலைப் போராட்டத்தின் களப் போராளிகள்’ என்ற புத்த கத்தில் பதிவு செய்துள்ளார். 

விடுதலைக்காகவே தன் படிப் பையும், பட்டம் பெறும் வாய்ப் பையும் இழந்த தோழர் என்.சங்க ரய்யா அவர்களுக்கு, அதே மதுரை பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக் டர் பட்டம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை எழுப்பியிருந்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர், தோழர் என்.சங்க ரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என உட னடியாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சிண்டிகேட் மற்றும் செனட்டில் தீர்மானம் நிறைவேற்றி நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு பட் டமளிக்கும் சான்றிதழில் கையெ ழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சரின் செய்திக் குறிப்பும் அதனை உறுதி செய்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு கொடுத் துவரும் சிறப்பு ஓய்வூதியம், பட்ட யங்கள், பட்டங்கள் உள்ளிட்ட அரசின் எந்த கவுரவிப்புகளையும் ஏற்பதில்லை என்று முடிவெடுத்த இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகும். இந்த முடிவின் அடிப்படையில், தோழர் என்.சங்கரய்யா அவர்கள் கடந்த காலங்களில் எந்த விருதுகளையும் மறுத்தே வந்துள்ளார்.

அதே சமயம் தமிழ்நாடு அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விரு தினை ஏற்றுக் கொண்ட அவர், அரசு அளித்த விருது தொகையான ரூபாய் 10 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

எனவே, அத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதால் அந்த பட்டத்திற்கும், வழங்குகிற பல்கலைக்கழகத்திற்கும் தான் பெருமை கூடும் என்பது வெளிப்படை.

ஆனால், ஹிந்துத்துவா அமைப் புகளும், அவற்றின் தலைமை அமைப் பான ஆர்.எஸ்.எஸ்.-ம் விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்த இயக்கங்கள் என்பது வர லாறு. பல சந்தர்ப்பங்களில் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒத்து ழைப்பு நல்கி ஆர்.எஸ்.எஸ். செயல் பட்டு வந்துள்ளது.

இதன் பிரதிநிதியாக செயல் படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கு வதற்கான கோப்பில் கையெழுத் திட மறுத்திருப்பது வியப்பளிக்க வில்லை. விடுதலைப் போராட்ட காலத்தில் அய்ந்து ஆண்டுகளும், பிறகு மக்களுக்கான போராட் டத்தில் 4 ஆண்டுகளும் என மொத்தம் ஒன்பது ஆண்டுகள் சிறை, இரண்டு ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கை என நீண்ட நெடிய தியாக வாழ்க்கையை கொண்ட தோழர் என்.சங்கரய்யா வின் அருமை பெருமைகளை உணர்வதற்கான தகுதியே இல்லா தவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி.

விடுதலைக்குப் பிறகும் இந்தி யாவின் மதச்சார்பற்ற மாண்பு களை பாதுகாப்பதற்கும், சுரண்ட லற்ற ஒரு சோசலிச சமூகம் அமைவதற்கும் உயரிய லட்சியப் பிடிப்போடு போராடி இன்றுவரை நமக்கு வழிகாட்டி வரும் தோழர் என்.சங்கரய்யாவின் பெருமையை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் ரசிக்க முடியுமா? அரசமைப்புச் சட்ட மாண்புகளை அழித்து, கார்ப்ப ரேட் மூலதன சக்திகளின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்தும் சங் பரிவார கூட்டத்திற்கு அவரது வாழ்வின் மேன்மைகளும், சிறப்பு களும் எட்டிக்காயாகத்தானே கசந்திடும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தோழர் என்.சங்கரய்யாவின் மகத் தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறு மைப்படுத்தியே வருகிறார். 

ஆளுநரின் இந்த தரக் குறைவான நடவடிக்கையை இந் திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மை யாக கண்டிக்கிறது.

-இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

சிபிஅய் கண்டனம்!

அரசியல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தமிழ்நாடு மாநில செய லாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத் தின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு “கவு ரவ டாக்டர்” பட்டம் வழங்குவது என தமிழ்நாடு அரசின்  உயர்கல் வித்துறை முடிவெடுத்து, வரும் நவம்பர் 2 ஆம் தேதி மதுரை காம ராஜ் பல்கலைக் கழகம்  நடத்தும் நிகழ்வில் வழங்க ஏற்பாடுகள் நடத்து வருகின்றன.

இந்த நிலையில்  பல்கலைக் கழ கங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் ஒப்புதலை பெறுவதற் காக தமிழ்நாடு அரசு ஆவணங் களை ஆளுநருக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் அனுப்பியுள்ளது.

நாட்டின் விடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்டு தியாக வாழ்வின் அடையாளமாக திகழ்பவர் தோழர் என்.சங்கரய்யா. காலனி ஆட்சிக் காலத்திலும், விடுதலை பெற்ற பின்னரும் மக்கள் நலன், தேச நலன் தொடர்பான கோரிக் கைகள் மீது போராடி சிறை சென்றவர்.  

தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியுள்ளவர். நாடு முழுவ தும் பரந்து வாழும் விவசாயிகளை  சங்க அமைப்பில் திரட்டுவதில் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர். மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந் தவர்.

மூத்த அரசியல் தலைவர்கள் காமராஜ், அண்ணா, ஜீவானந்தம், கலைஞர் போன்றோருடன் இணைந்து பணியாற்றிய அனுப வம் பெற்றவர்.

தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர்” விருது கொடுத்து  கவுரவித் துள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் பெரு மதிப்பை பெற்ற பொதுவாழ்வுக் குரிய தோழர்.என். சங்கரய்யாவுக்கு “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கும் தமிழ்நாடு அரசின் முடிவை ஏற் காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது அறிவுக்கு பொருத்தமற்றது.

ஆளுநரின் பொறுப்புக்கு உகந்த செயலும் அல்ல. ஆளுநரின் அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.

-இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *