தந்தை முடித்த பயணத்தை நாம் தொடர்ந்திடுவோம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறுக்க முடியாது.
இன்று தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோபலட்சம் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது.

எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டி. இந்தப் பிரிவு பற்றி என்ன செய்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன்.
இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்த புரட்சிக்காரனை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
நாம் தொடர்வோம்!

– முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *