தந்தை முடித்த பயணத்தை நாம் தொடர்ந்திடுவோம்!

viduthalai
1 Min Read

தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம் கடைசி மூச்சு வரையில் சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறுக்க முடியாது.
இன்று தமிழ்நாடு தன்மான உணர்வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோபலட்சம் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது.

எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டி. இந்தப் பிரிவு பற்றி என்ன செய்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன்.
இந்தியாவின் தலைசிறந்த சீர்திருத்த புரட்சிக்காரனை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
நாம் தொடர்வோம்!

– முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *