தந்தை சொல் வாழும்! – பாவலர் பாலசுந்தரம்

1 Min Read

தந்தை என்னும் முறை கொண்ட தலைவர் வாழி!
தமிழர் நல வெறி பூண்ட சமரர் வாழி!
சிந்தை குளிர் சீர்திருத்தச் செம்மல் வாழி!
செயல் வீரர் பலர் கொண்ட தீரர் வாழி!
அந்தகம் சூழ் தமிழ் நாட்டை அரட்டி, சீர்த்தி
அறிவகமாய் அமைந்திட்ட அண்ணல் வாழி!
இந்தத் தரை உள்ளமட்டும் இருண்டிடாத
எழில் மிகுந்த ஒளி தந்த எந்தை வாழி!

சங்குகள் நிறமும் மாறி,
சந்தனம் மணமும் மாறி,
செங்கதிர் திசையும் மாறி,
தெங்குநீர் குளிரும் மாறி,
திங்கள் தண் நிலையும் மாறி,
தெவிட்டமு தினிப்பும் மாறி,
சங்கமும் மாறினாலும்
தந்தை சொல் வாழும்; நாளும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *