மறைவு

1 Min Read

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட்ட துணைத் தலைவர் ‘அறிவுக்கடல் தையலகம்’ பெரியார் பெருந்தொண்டர் மு.ஏழுமலை அவர்களின் இணையரும், மதுராந் தகம் நகர செயலாளர் ஏ.செல்வத்தின் தாயாரும், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கவுதமின் பாட்டியாருமான ஏ.சந்திரா (வயது 78) 18.12.2023 அன்று காலை மறைவுற்றார். மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த அம்மையாரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

– – – – –

ராமநாதபுரம் மாவட்டம், தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹிட்லர் காசி அவர்கள் திராவிடர் கழகத்தில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் 20.12.2023 அன்று மறைவுற்றார். மறுநாள் (21.12.2023) தலைமைக் கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி, மாவட்ட கழக தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் அண்ணாரவி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை வைத்து கழக கொள்கைப்படி அவருக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *