மறைவு

viduthalai
1 Min Read

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் மாவட்ட துணைத் தலைவர் ‘அறிவுக்கடல் தையலகம்’ பெரியார் பெருந்தொண்டர் மு.ஏழுமலை அவர்களின் இணையரும், மதுராந் தகம் நகர செயலாளர் ஏ.செல்வத்தின் தாயாரும், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கவுதமின் பாட்டியாருமான ஏ.சந்திரா (வயது 78) 18.12.2023 அன்று காலை மறைவுற்றார். மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மறைந்த அம்மையாரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

– – – – –

ராமநாதபுரம் மாவட்டம், தொருவளூர் கிராமத்தைச் சேர்ந்த ஹிட்லர் காசி அவர்கள் திராவிடர் கழகத்தில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் 20.12.2023 அன்று மறைவுற்றார். மறுநாள் (21.12.2023) தலைமைக் கழக அமைப்பாளர் கே எம் சிகாமணி, மாவட்ட கழக தலைவர் எம்.முருகேசன், மாவட்ட செயலாளர் அண்ணாரவி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை வைத்து கழக கொள்கைப்படி அவருக்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *