வடலூரில் அய்யா நினைவு நாள் அமைதி ஊர்வலம்!

viduthalai
1 Min Read

வடலூர் நகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் அவர்களின் அய்ம்பதாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 அன்று காலை 8:30 மணி அளவில் வடலூர் சபை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் கழகத் தோழர்களும் தோழமைக் கட்சி நண்பர்களும் ஊர்வலமாக வடலூர் குறுக்கு சாலையில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பர்.

– திராவிடர் கழகம், வடலூர்.

– – – – –

கடலூர் மாவட்ட திராவிடர் கழகம் மாநகர திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அய்ம்பதாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.2023 அன்று காலை 10 மணி அள வில் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து மாவட் டக் கழகத் தலைவர் சோ.தண்டபாணி மாநகரக் கழகத் தலைவர் தென் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கழகத் தோழர்கள் மற்றும் தோழமைக் கட்சியினர் ஊர்வல மாக அண்ணா பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பர்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன் சிறப்புரை ஆற்றுவார் மற்றும் மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி மாவட்ட அமைப்பாளர் மணிவேல் மாநகர செயலாளர் சின்னதுரை மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் கழக காப்பா ளர் அரங்க பன்னீர்செல்வம் இளைஞர் அணி நிர்வாகிகள் உதயசங்கர் ராமநாதன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பெரியார் செல்வம் வெங்கடேசன் அருணாசலம் தர்மலிங்கம் மகளிர் அணி மாவட்ட தலைவர் முனியம்மாள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று கருத்துரை ஆற்றுவர்.

– திராவிடர் கழகம் கடலூர் மாவட்டம்
மற்றும் மாநகரம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *