குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபட்ட 20 பேருக்கு சென்னையில் குண்டர் சட்டத்தில் சிறை

1 Min Read

சென்னை, டிச. 22- சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். சென் னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் குற்றச் செயல்களில் ஈடு படுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் குண் டர் சட்டத்தில் சிறையில் அடைக் கப்படுகின்றனர்.

கடந்த 01.01.2023 முதல் 20.12.2023 வரை சென்னை பெருநக ரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட் டதாக 459 பேர், திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக 116 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 84 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் உட்பட மொத்தம் 687 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிச.14 முதல் 20 வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 3 பெண்கள் உட்பட 20 பேர் மீதுகுண்டர் சட் டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத செயல்களில் ஈடுபடு பவர்களை தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். அவ்வகை குற்றச் செயல்களில் யார் ஈடுபட் டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *