அயோத்தி கோயிலில் சாமியார் படுகொலை

1 Min Read

 பைசாபாத், அக்.22 அயோத்தியில் உள்ள பிரசித்திபெற்ற ஹனுமான்கர்ஹி கோயில் வளாகத்தில் துறவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. 18.10.2023 அன்று மாலை நடந்த இந்தக் கொலை தொடர்பாக ஒரு நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ராம் சஹாரே தாஸ் என்ற அந்த துறவி (44), கோயில் வளாகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். அவர் கோயில் வளாகத்தில் புதன் கிழமை (18.10.2023) மாலை கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார். கோயிலில் வசிக்கும் ரிஷப் சுக்லா உள்பட 2 பேர் இக்கொலையில் ஈடுபட்டதாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து, சாதுவின் உதவியாளர் காவல் துறை யில் புகார் அளித்துள்ளார். ரிஷப் சுக்லா தலைமறைவாக உள்ள நிலை யில், மற்றொரு நபரை பிடித்து விசா ரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

ஹனுமான்கர்ஹி கோயிலின் தலைமை பூஜாரி ராஜு தாஸ் கூறுகை யில், ‘கொலையான சாது, கடந்த 1991-ஆம் ஆண்டில் இருந்து அதாவது சிறுவனாக இருந்தபோதே கோயில் வளாகத்தில்தான் வசித்து வந்தார். கோயிலில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த அவர், 8-10 குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வி போதித்து வந்தார். அவரது கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *