தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ‘5 ஆண்டு சட்டப் படிப்’பில் ‘தமிழ் பாடம்’ இடம் பெறும் : அமைச்சர் ரகுபதி அறிவிப்பு

viduthalai
1 Min Read

சென்னை, டிச.22 அய்ந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரவிழா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கூட்ட ரங்கில் நேற்று (21.12.2023) நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது:

பல்வேறு மாநிலங்களில் சட்டப் படிப்பில் தாய்மொழி ஒரு பாடமாக இடம் பெற்றுள் ளது. கருநாடகத்தில் சட்டப் படிப்பில் கன்னடம் ஒரு பாட மாக இருந்து வருகிறது. அதே போல், தமிழ்நாட்டிலும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் ஒரு பாடமாக இடம்பெறும். முதல மைச்சர் சார்பில் இதை அறி விக்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி களிலும், கூட்டங்களிலும் முதல மைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மேற்கொண்டு வரும் 100 சட்டங் களை தமிழ்மொழியாக்கம் செய் யும் பணியை விரைந்து முடித்து, சட்ட நூல் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, சட்ட ஆட்சிமொழி ஆணையத் துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ் வளர்ச்சித் துறை செய்யும் என்று உறுதி யளித்தார்.

மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதிபதி இரா.தாரணி, ஆணையத்தின் முழு நேர உறுப்பினர்கள் அ.முகமது ஜியாவுதீன், ச.கோபி ரவிகுமார், வி.வில்ஸ்றோடாஸ்பின், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், பதி வாளர் கவுரி ரமேஷ் பங்கேற் றனர். ஆணைய பகுதிநேர உறுப் பினரும், புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான சு.முரளி அரூபன் வரவேற்றார். பகுதிநேர உறுப்பினர் கனிமொழி மதி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *