சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

viduthalai
1 Min Read

காலை 8.00 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் மாலை அணிவிப்பு, கொடுங்கையூர் காமராசர் சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தமிழர் தலைவர் தலைமையில்
‘அமைதி ஊர்வலம்’

காலை 9.00 மணி: சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி தலைமையில் கழகத் தோழர்கள் பெருந் திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் Ôஅமைதி ஊர்வலம்’ தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடலை அடைகிறது.
நினைவிடங்களில் மரியாதை

காலை 9.30 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *