தமிழ்நாட்டுப் பெண் தொழில் முனைவோருக்கு விருது

1 Min Read

சென்னை, டிச.21- -தென்னிந்தி யாவின் முன்னணி மசாலா தயா ரிப்பு நிறுவனமாகிய சக்தி மசாலா பிரைவேட் லிமிடெடின் இயக் குநர் டாக்டர் சாந்தி துரைசாமி, உலகளாவிய தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டை (TiE) அமைப்பின் சென்னைக் கிளையால், இந்த ஆண்டின் சிறந்த டைகான் (TiECON) பெண் தொழில்முனைவர் விருதைப் பெற் றார்.
சமீபத்தில் சென்னையில் நடை பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழில்முனைவர் கருத்தரங்கு களில் ஒன்றாகிய டைகானின் 16ஆவது கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.
டை சென்னை அமைப்பின் மேனாள் தலைவர் மற்றும் கவின் கேர் நிறுவனத்தின் தலைவர்
சி.கே.ரங்கநாதன், டை சென்னை யின் தலைவரும். இண்டக்ரா நிறு வனத்தின் நிறுவனருமான சிறீராம் சுப்ரமண்யா ஆகியோர் இவ்விரு தினை திருமதி சாந்தி துரைசாமிக்கு வழங்கினர்.
டைகான் 2023 விருதைப் பெறுவது குறித்து சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி கூறுகையில், கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மிகுந்த திருப்தி அடைகிறோம். சக்தி மசாலா நிறுவனம் தரமான நியாய மான வணிக நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவன மாகும்.
எங்கள் நிறுவன சமூகப் பொறுப்பின் வரம்பை மேலும் இவ்விருது விரிவுபடுத்தும் அதே வேளையில், தொழில் முன்னேற்றத் திற்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *