தமிழ்நாடு தேர்வாணையம் குரூப் 4 உட்பட 19 தேர்வுகளுக்கு அறிவிப்புகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச. 21- டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆண்டு திட்ட அட்டவணை ஒவ் வொரு ஆண்டும் டிஎன் பிஎஸ்சியால் எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர் வுகள் நடத்தப்படும், எவ் வளவு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என் பதற்கான ஒரு தோராய மான பட்டியலை ஆண்டு திட்ட அட்டவணையாக வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்விற்கு 2024ஆ-ம் ஆண்டு ஜன வரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என் றும், ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதற்கான பணியிடங் களை பின்னர் அறிவிக்கப் படும் என்றும் தேர்வா ணையம் தகவல் தெரிவித்துள்ளது.
சமூக சேவை துறை யில் 2 பணியிடங்களுக்கும் பிப்ரவரி மாதம் அறி விக்கை வெளியிடப்படும் என்றும், மே மாதம் தேர் வுகள் நடைபெறும் என் றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டத் துறையில் ஆங்கில எழுத் தாளர் பதவிக்கு 6 பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் என்றும், மே மாதம் தேர்வு நடை பெறும்.

வனத்துறையில் 1264 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் -_ ஜூன் மாதம் தேர்வு நடைபெறும்.
குரூப் 1 தேர்விற்கு 65 பணியிடங்களுக்கு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்_ ஜூலை மாதம் தேர்வு நடைபெறும். ஆங் கில துணை சேவை துறை யில் 467 பணியிடங்க ளுக்கு ஏப்ரல் மாதம் அறி விக்கை வெளியிடப்படும் _ ஜூலை மாதம் தேர்வு நடைபெறும்.
சட்டத்துறையில் 25 பணியிடங்களுக்கு ஏப் ரல் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.
வனத்துறையில் வன அதிகாரி 118 பணியிடங் களுக்கு மே மாதம் அறி விக்கை வெளியிடப்படும் _ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த புவியியல் துறையில் 5 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் _ ஆகஸ்ட் மாதம் தேர்வு நடை பெறும். குரூப் 2 தேர்விற்கு 1294 பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிக்கை வெளியிடப்படும் _ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும். அறிவியல் துறையில் 96 பணியிடங் களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப் படும்_செப் டம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த புள் ளியியல் துறையில் 23 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிக்கை வெளியிடப்படும், செப்டம்பர் மாதம் தேர்வு நடை பெறும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *