10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வினா-வங்கி புத்தகம் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

2 Min Read

சென்னை, டிச. 21- 10, 12ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள வினா_-வங்கி புத்தகத்தை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி நேற்று (20.12.2023) வெளியிட்டார்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில் 10, 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட வாரியாக வினா_ வங்கி புத்த கங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வினா_ வங்கி புத்தகங் களை வெளியிட்டார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக வினா_ வங்கி புத்தகங்கள் அச் சிடப்படவில்லை. இந்த ஆண்டு 2 லட்சம் வினா_வங்கி புத்தகங் களை அச்சிட்டுள்ளோம்.
பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு இவை பெரி தும் பயனுள்ளதாக இருக்கும். கனமழையால் தென்மாவட்டங் கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன.

இம்மாவட்டங்களில் மழை யால் பாதிக்கப்பட்ட மாணவர் களின் விவரங்களை கணக் கெடுத்து வருகிறோம்.
அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீரு டைகள் விரைவில் வழங்கப்படும். மழை பாதித்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே வகுப்புகள் தொடங்கப்படும்.
பொதுத்தேர்வுகள் திட்ட மிட்டபடி நடத்தப்படும். இவ் வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பி னர்-செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முத்துக் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் (வினா_-வங்கி), கணிதத் தீர்வு புத்தகம், கணித ‘கம்’ புத்தகம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) அனைத்து மாவட்ட விற்பனை மய்யங் களிலும் கிடைக்கும் என பள் ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோடம்பாக் கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, சேத் துப்பட்டு எம்சிசி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் ஜெய கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் மேல் நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 இடங்களில் விற்பனை மய் யங்கள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார். மழை பாதித்த பள்ளிகளில் மாண வர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *