வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா 21.10.2023 அன்று மும்பை, மாதுங்கா பகுதியில் உள்ள மைசூர் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “தாய் வீட்டில் கலைஞர்” நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நூலினைத் தமிழ் இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் வழங்க, மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான், திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாஸ் ஆகிய மூவரும் பெற்றுக் கொண்டனர்.