இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர் எட்டு பேர் விடுதலை

1 Min Read

ராமேசுவரம், டிச.21 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிச.6ஆ-ம் தேதி கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என் பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைப் பற்றினர். படகிலிருந்த ஜெயஸ்தன் (36), தால்ஷா (50), சார்லஸ் (54), லாசர் கெபிஸ்டன் (30), தினேஷ் (38), முனியசாமி (58), அருள் பிரிட்சன் (28), ஜான் சைமன் (31) ஆகிய 8 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஜீத், இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் அடிப் படையில் 8 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், ஜன. 24 அன்று படகின்உரிமையாளர் உயிர்தராஜ் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும்தெரிவித்து நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *