அரியலூரில் “அய்யா இயற்கை அங்காடி” திறப்பு விழா கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு

viduthalai
1 Min Read

அரியலூர், டிச. 20– அரியலூர் மாவட் டம், செந்துறை நகரில் “அய்யா இயற்கை அங்காடி” திறப்பு விழா 17.12.2013 அன்று காலை 10 மணி யளவில் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழகம் தலைவர் விடுதலை.நீலமேகன், விழாவிற்கு தலைமையேற்று சிறப் பித்தார், திமுக ஒன்றிய செயலாளர் வி.எழில்மாறன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். காப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் சு. மணிவண்ணன், மாவட்ட செயலாளர் மு. கோபால், கடம்பன் செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற் றினர்.

பகுதி மக்களின் வாழ்வில் எப் போதும் அக்கறை எடுத்துக்கொள் கிற, தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ. பெருநற்கிள்ளி, அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார். பொதுக்குழு ஊறுப்பினர் சி.காமராஜ், தனது வாழ்த்துரையில் இயற்கைமுறை உணவின் பயன் குறித்து எடுத்துரைத்தார்.
திமுக செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் பூ. செல்வராஜ் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், பொருளை அதற்கான விலையினைக் கொடுத் துப் பெற்றுக்கொண்டார்,
மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பொன்.செந் தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாவட்ட இணைச் செய லாளர் இரத்தின. இராமச்சந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெ. இளவரசன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சி.கருப்புசாமி, ஒன்றிய செயலாளர் இராசா. செல் வக்குமார், ஒன்றிய அமைப்பாளர் சோ.க. சேகர், நகர தலைவர் பழ. இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மு.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் துரை. பிர பாகரன், ஜெயங்கொண்டம் ஆசிரி யர். த. வெங்கடேசன், பெரியாக் குறிச்சி து. அண்ணாதுரை, பொன். சின்னமணி, க.நடராஜன், சு.செல் வக்குமார் மற்றும், பலர் பங்கேற் றனர்.
ஒன்றிய கழகத் தலைவர் மு.முத்தமிழ்ச்செல்வன் நிறைவாக நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *