புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து உரையாடினார்!
புதுடில்லி, டிச.20- புது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங் களுக்கும் மேலாக நீடித்தது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், இந்தியா கூட்டணி யின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டில்லி சென்ற நிலையில், டில்லி யிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, டில்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (19.12.2023) காலை சந்தித்துப் பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘உங் களில் ஒருவன்’ நூலின் ஆங்கில பதிப்பான “One AmongYou” புத்தகம் மற்றும் பூங்கொத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர் களுக்கு கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது என்பது குறிப்பிட த்தக்கது.
இச்சந்திப்பின்போது, நாடா ளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முன்னதாக, தமிழ்நாடு இல்லத்தில், காவல்துறை அணி வகுப்பு மரியாதையை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
பேராசிரியர் உருவப் படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால்
மலர் தூவி மரியாதை
இந்நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசிட வருகை தந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இனமானப் பேரா சிரியர்அவர்களின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ ரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.