டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை!

1 Min Read

புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து உரையாடினார்!

புதுடில்லி, டிச.20- புது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங் களுக்கும் மேலாக நீடித்தது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், இந்தியா கூட்டணி யின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டில்லி சென்ற நிலையில், டில்லி யிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, டில்லி முதல்மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (19.12.2023) காலை சந்தித்துப் பேசினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ‘உங் களில் ஒருவன்’ நூலின் ஆங்கில பதிப்பான “One AmongYou” புத்தகம் மற்றும் பூங்கொத்து அரவிந்த் கெஜ்ரிவால் அவர் களுக்கு கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது என்பது குறிப்பிட த்தக்கது.
இச்சந்திப்பின்போது, நாடா ளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.முன்னதாக, தமிழ்நாடு இல்லத்தில், காவல்துறை அணி வகுப்பு மரியாதையை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

பேராசிரியர் உருவப் படத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால்
மலர் தூவி மரியாதை
இந்நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசிட வருகை தந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இனமானப் பேரா சிரியர்அவர்களின் 102ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவ ரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *