“விடுதலை” சி.கே.பிரித்விராஜ் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 19- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:
விடுதலை நாளிதழ் விளம்பரப் பிரிவில் பணி யாற்றி வந்த சி.கே.பிரித்வி ராஜ் (வயது 52) நேற்று (18.12.2023) அரசினர் பொது மருத்துவமனை யில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
எண்ணூர் காம ராஜ் தெருவில் வசித்து வந்த சி.கே.பிரித்விராஜ் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வார இதழான ‘’ஜனசக்தி’’ நாளிதழாக வெளியான போது, ஜனசக்தி பத்திரி கையில் சேர்த்து கணினி பயிற்சி பெற்றவர். மூத்த தலைவரும், பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவருமான ஜே.எம். கல்யாணம் அவர்களது வழி காட்டலில் பத்திரி கையாளர் பயிற்சி பெற் றவர். நல்ல வடிவமைப்பா ளராக உயர்ந்தார். திரைப் பட கலைஞர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தவர்.

ஜனசக்தி நாளிதழ் மீண்டும் வார இதழாக மாற்றப்பட்ட நேரத்தில் விடுதலை பத்திரிகையில் இணைந்து விளம்பரப் பிரிவில் பணியாற்றி வந் தார்.
பணிவு, அடக்கம், அமைதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்து வாழும் சாட்சியாக இருந்த சி.கே.பிரித்விராஜ் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீ ரென ஏற்பட்ட உடல் செயலிழப்பு தொடர்பாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி 18.12.2023 அன்று மதியம் உயிரி ழந்தார். இவருக்கு மனை வியும் மூன்று மகன்களும் உள்ளனர்.
அன்னாரின் மறை வுக்கு இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சியின் தமிழ் நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி, மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *