தூத்துக்குடி, டிச. 18- இயக்க வெளியீடு களான புதிய நூல்கள், நாட்காட்டி நாள்குறிப்பு அறிமுக விழா மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றி னார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை வாசித்து தொடக்கவுரை யாற்றினார்
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப் பாளர் நாகை.மு.இளமாறன் எழுச் சியுரையாற்றினார்,
மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் மோகன்தாஸ் சாமு வேல் நூல்கள், நாட்காட்டி, நாள்குறிப்பை பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் அவர்களின் தொண்டின் பயன்களை விளக்கி கருத்துரையாற்றினார்,
கழக காப்பாளர் மா.பால் இராசேந்திரம் இளவயது முதல் இன்றுவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினை தொகுத்தளித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் செ.வள்ளி நன்றி கூற விழா நிறைவுபெற்றது.
தூத்துக்குடியில் நூல் அறிமுக விழா

Leave a Comment