தூத்துக்குடியில் நூல் அறிமுக விழா

1 Min Read

தூத்துக்குடி, டிச. 18- இயக்க வெளியீடு களான புதிய நூல்கள், நாட்காட்டி நாள்குறிப்பு அறிமுக விழா மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றி னார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை வாசித்து தொடக்கவுரை யாற்றினார்
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப் பாளர் நாகை.மு.இளமாறன் எழுச் சியுரையாற்றினார்,
மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் மோகன்தாஸ் சாமு வேல் நூல்கள், நாட்காட்டி, நாள்குறிப்பை பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் அவர்களின் தொண்டின் பயன்களை விளக்கி கருத்துரையாற்றினார்,
கழக காப்பாளர் மா.பால் இராசேந்திரம் இளவயது முதல் இன்றுவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினை தொகுத்தளித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் செ.வள்ளி நன்றி கூற விழா நிறைவுபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *