கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

viduthalai
2 Min Read

18.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் காரியக் கமிட்டியின் கூட்டம் டிசம்பர் 21 டில்லியில் நடைபெறும் – கார்கே.
* 2024 பொதுத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் – இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திமுக வேண்டுகோள்.
* டில்லியில் வரும் 19ஆம் தேதி நடக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் மம்தா பங்கேற்பு.
* நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக மோடி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், கேள்வி கேட்கும் எம்.பி.க்களை நீக்கக்கூடாது என்கிறது தலையங்க செய்தி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் நாடாளுமன்றத்துக்குள் குதித்த மர்ம நபர்களுக்கு பாஸ் விநியோகித்ததாக போலி செய்தி பரப்பிய குற்றச்சாட்டில், தமிழ்நாடு பாஜக நிர்வாகி ’சங்கி இளவரசர்’ பிரவின்ராஜ் மீது வழக்கு.
தி இந்து:
* 13 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம்.
* நாட்டில் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, தற்போதைய 6% வளர்ச்சி விகிதம் போதுமானதல்ல. இதே நிலை நீடித்தால் 2047ஆம் ஆண்டு வரை இந்தியா பணக்கார நாடாக திகழ்வதற்கு சாத்திய மில்லை என, ரிசர்வ் வங்கி மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமர் செய்தித்தாள் ஒன்றில் பேசுகிறார் – உள்துறை அமைச்சர் செய்தி சேனலில் பேசுகிறார். ஆனால் எங்கு பேச வேண்டுமோ (நாடாளுமன்றத்தில்) இவர்கள் யாரும் பேச மாட்டார்கள்,என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி காட்டம்.
* தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தது ‘மிகப்பெரிய கொள்ளை’ என காங்கிரஸ் கண்டனம். இந்திய மக்களின் செலவில் மோதானி (மோடி பிளஸ் அதானி) எப்படி வளம் பெறுகிறார் என்பதற்கு இது மற்றொரு உதாரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடல்.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *