எம்.ஜே. பிரபாகர்
இஸ்ரேலில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை “பெரியாரும் அறிவியலும்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் பெரியார் சேவை மய்யம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஆற்றிய உரையின் வடிவமே இந்த நூல்.
உலக அறிவியல் தொழில்நுட்பத் தின் முக்கியமான துறைகளில் ஒன்று விண்வெளி ஆராய்ச்சியாகும்.
இத்துறையில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் அத்தனை பேரும் தமிழ் மொழியில் படித்தவர்கள்; குறிப்பாக அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.
நூலாசிரியர் தந்தை பெரியாரோடு, பெரியார் கொள்கையோடு முழு ஈடுபாடுவந்தது தன் தந்தையின் மூலம் தான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனது மகன் மயில்சாமி அண்ணாதுரை சிறுவயதாக இருக்கும் போதே பெரியாரை பற்றி தொடர்ந்து பேசி வந்துள்ளார் அவருடைய தந்தை.எனவே பெரியாரை பற்றி முழுமையாக அறிந்த நூலாசிரியர் தன்னுடைய படிப்போடு, வாழ்க்கையோடு, வேலையோடு பெரியார் சிந்தனைகளை உள்வாங்கி ஈடுபாட்டுடன் பயன்படுத்தி செயலாற்றி மிகப்பெரிய பொறுப்புக்கு வந்ததை பெருமையோடு குறிப்பிடுகிறார்.
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி. “பழமை தாண்டி புதுமையை நோக்கி போக வேண்டும். அதுதான் மனி தனுக்கான ஒன்று” – என்று பெரியார் அடிக்கடி தெரிவித்துள்ளதை நினைவு கூருகிறார் நூலாசிரியர். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவ தில்லை. இதுபோன்றே பெரியாருடைய விதைப்புகள் ஒரு விருட்சமாக வளர்ந்து உள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்கள் செக்கு மாடாக இருக்கக் கூடாது. பந்தய குதிரைகளாக இருக்க வேண்டும் என்றும் பெரியார் குறிப்பிட்டதை நினைவில் கொள் கிறார்.
பயிற்சி, முயற்சி, வேகம், விவேகம்இவைகளோடு சென்று சரியாக பயன்படுத்திக் கொண்டால் தங்களு டைய வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்றார் பெரியார்.
“இதைக் கூறுவது, உன்னை சுயமாகயோசிக்க வைக்க வேண்டும் என்பதற்குத் தானே தவிர கண் மூடித்தனமாய் பின்பற்று, சொல்வது படி, உன்னை மாற்றிக் கொள்” என்பது அல்ல.
நீ நீயாகவே இரு என்றார் பெரியார்.
எனவே பெரியாரின் கருத்துக்களை இன்றைய இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதை தன்னுடைய அனுபவத் தின் வாயிலாக தெரிவிக்கிறார். யார் சொல்லி இருந் தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உன் புத்திக்குப் பொது அறிவுக்கு பொருந்தாத எதை யும் நம்பாதே என்று பெரியார் கூறியதையும் தன்னு டைய வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து வாழ்ந்து உள்ளார் நூலாசிரியர்.
மனிதன் தன்னை வெளிப்படுத்து வதற்கும் சரி மற்றவர்களுக்கு சொல்வ தற்கும் சரி மொழி என்பது முக்கியம். மொழி தான் உண்மையான போர்க்கருவி. அதை காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்.
தெளிவாக கேள்வி கேட்பது விஞ்ஞானத்தின் அடிப்படை விதை என்பதை பெரியார் வலியுறுத்தி யதை தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளார்.
அதுபோன்று ஓய்வு என்பது எக்காலத்திலும் கூடாது. ஓய்வு, சலிப்பு என்பது இளமையிலும் சரி முதுமையிலும் சரி எப்பொழுதும் இருக்கக் கூடாது – அது தான் உயிர் உள்ள மனிதத்தன்மை என்கிறார் பெரியார்.
எக்காலத்திலும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.
மனிதன் பிறந்த நாள் முதல் சாகும் வரையிலும் கற்றுக் கொள்ளும் ஒரு மாணவனாகத் தான் இருக் கிறான். எனவே இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் கருத்து.
உன் அறிவையே நம்பு என்று அழுத்தம் திருத்த மாக உணர்த்தியது தான் உண்மை அறிவியலின் அடிப்படை. அதை சுவைபட தன்னுடைய வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டார் அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை.
இந்த நூலை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெரியார் அறிவியலுக்கு எவ்வளவு உரியவராக இருந்துள்ளார் என்பது தெரியவரும்.
புது உலகம் படைக்க சமூக விஞ்ஞானி பெரியாரை வாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நூலுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
நூல் : “பெரியாரும் அறிவியலும்”
நூலாசிரியர் : அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
விலை : ரூபாய் 90
வெளியீடு : பெரியார் புத்தக நிலையம்
சென்னை-600007
தொடர்பு எண்: 044 26618163
நன்றி: ‘தீக்கதிர்’, 18.12.2023
தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் – பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம்
சென்னை: பெரியார் திடல், 84/1, (50) ஈ.ª.வகி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007
044-26618163 / 83003 93816
திருச்சி: பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி – 620 017
0431-4200987 / 96266 57609
www.dravidianbookhouse.com