சென்னை, டி.ச.18- ‘மிக்ஜம்’ புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரியில் நேற்று (17.12.2023) தொடங்கி வைத் தார். அப்போது, மேடையில் 10 பயனாளிகளுக்கு மட்டுமே முதலமைச்சர் நிவாரண உதவித் தொகையை வழங்கும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிவா ரண தொகையை வழங்கிக் கொண்டிருந்தபோதே, மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவுறுத்தலின்படி மேற்படி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. எனினும், மொத்தம் 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு அந்த பயனா ளிகள் மட்டுமே பந்தலில் இருந்த தால், அனைவருக்கும் முதல மைச்சர் கையினாலேயே நிவா ரண தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அனைத்து பயனா ளிகளுக்கும் முதலமைச்சரே நிவாரண தொகையை வழங்கிக் கொண்டிருந்தபோது, வயது முதிர்ந்த பாட்டிகள் மேடை ஏறி வருவதற்கு சிரமப்பட்டதை கவனித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மேடை யில் இருந்து கீழே இறங்கி வந்து மீதம் உள்ள அனைவருக்கும் நிவாரண தொகையை வழங் கினார். இதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது என்றால் அது மிகையல்ல.
முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு
Leave a comment