நடந்து முடிந்த மத்தியப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தீவிர ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளாரும் பொதுமேடையிலேயே சிறு பான்மையினரை மோசமாக சித்தரிப்பவருமான மோகன் யாதவ் முதலமைச்சராகி உள்ளார், பேரவைத் தலைவராக மேனாள் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் டிசம்பர் 13-ஆம் தேதி பொறுப்பேற்றார்.
மத்தியப்பிரதேசத்தின் புதிய முதலமைச்சரான மோகன் யாதவ் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மத வழி பாட்டு ஒலிபெருக்கிகளுக்கு தடை, உரிமம் இல்லாமல் இறைச்சியை திறந்தவெளியில் விற்கத் தடை விதிக்கும் செயல் திட்டங்களை முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என மத்தியப்பிரதேச அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் மோகன் யாதவின் ஒலி பெருக்கி மற்றும் இறைச்சிக்குத் தடை தொடர்பான செயல் திட்டம் இஸ்லாமியர் மற்றும், தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையே! ஒலி மாசுபாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட் டுதல் மூலம் மத வழிபாட்டு ஒலிபெருக்கிகளுக்கு தடை திட்டம் கொண்டு வருகிறோம் என மத்தியப்பிரதேச பாஜக அரசு கூறினாலும், மசூதிகளில் நாள்தோறும் ஒலிக்கும் தொழுகைப் பாடல்களை தடை செய்வதற்கான செயல் திட்டம்தான் இது. மத வழிபாட்டு ஒலிபெருக்கிகளுக்கான தடையின் முன்மொழி வாகும் – இதே போல உரிமம் இல்லாமல் இறைச்சியை திறந்தவெளியில் விற்க தடை விதிக்கும் திட்ட முன்மொழிவு மூலம் நாளடைவில் இறைச்சி இல்லாத மத்தியப்பிரதேச மாநிலம் என்ற பெயரை கொண்டுவருவதற்கான வகுப்புவாத அரசியலை கையிலெடுத்துள்ளது மத்தியப்பிரதேச பாஜக அரசு.
பா.ஜ.க. என்றாலே, அது வெறும் மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிலம்பம் ஆடும் கட்சியே!
அதிகாரம் கையில் கிடைத்ததால் தங்களுடைய ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா சித்தாந்தத்தை செயல்படுத்தியே தீர்வது என்பதில் மூர்க்கத்தனமாக ஈடுபடுவதில் ஆச்சரிய மில்லை.
நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறிவரும் ‘திராவிட மாடல்’ என்பதில் உள்ள அனை வருக்கும் அனைத்தும் என்ற சமத்துவ, சமதர்ம, சுயமரியாதை சித்தாந்தத்தை ஒல்லும் வழியில் கொண்டு செல்வது அவசிய மாகும்.
விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தும் போது அதை முன்னெடுப்பதில் என்ன தயக்கம் – என்ன தடை? இதுதான் முக்கியமானது.
மோகன் யாதவ் மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்ந் தெடுக்கப்பட்ட பிறகு முதல் கையெழுத்தாக மாநிலம் எங்கும் திறந்த வெளி இறைச்சிக்கடைகளை மூடவேண்டும் என்ற அரசாணையில் கையொப்ப மிட்டார். இதில் முட்டை கடைகளும் அடங்குமாம்.
திறந்தவெளி என்றால் யார் பார்வைக்கும் படாவண்ணம் என்ற விதிகளின் படி இந்த அரசாணை உள்ளது.
பொதுவாக இறைச்சிக்கடைகள் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவைகளை சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்கும் வகையில் தொங்கவிட்டுத்தான் விற்பனை செய்ய முடியும். ஆனால் அரசின் புதிய ஆணைப்படி இறைச்சிக்கடைகளில் இறைச்சி கண்களிலேயே தென் படக்கூடாது,
15.12.2023 அன்று உஜ்ஜைனில் கண்ணாடியால் மறைக்கப் பட்ட இறைச்சிக்கடைகளில் இறைச்சியை தொங்கவிட்டார்கள் என்ற காரணத்திற்காகவே இறைச்சிக் கடைகள் இடிக்கப்பட்டன. அரசாணைப்படி எச்சரிக்கை விட்டு அபராதம் விதிப்பது என்பதுதான் – ஆனால் அது முதலமைச்சரின் தொகுதி என்பதால் ஜேசிபி கொண்டுவந்து இடித்துத் தள்ளினர்.
இனிமேல் இறைச்சியைப் பார்வைக்குப் படாதவாறு வெட்டி பைகளில் போட்டுவிற்பனை செய்யவேண்டும். ஆனால் இது பொதுவாக இறைச்சிவிற்பனை செய்யும் வியாபாரிகளால் இயலாத செயல் ஆகும்.
தற்போது கோழி மற்றும் ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் வெட்டும் இடத்தில் இருந்து பெரிய மால்களில் உள்ள வணிக நிறுவனங்கள் நேராக சிறப்புப் பைகளில் போட்டு – குளிர்சாதன பெட்டியில் அடைத்து விற்பார்கள். அதை மட்டுமே இனி வாங்க வேண்டிய சூழலுக்கு மத்தியப்பிரதேச மக்கள் சென்றுவிட்டனர். பொதுவாக மால்களில் விற்கப்படும் இறைச்சி வகைகள் வெளிக்கடைகளைவிட 3 மடங்கு விலை அதிகமாக விற்கப் படுகிறது. இதன்படி இனி இறைச்சி வாங்க நகரங்களில் உள்ள மால்களை மட்டுமே மக்கள் தேடிச் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
எல்லாம் கார்ப்பரேட்மயம் என்பது தானே பிஜேபி ஆட்சியின் கொள்கையும் நடப்பும்!
மத்தியப் பிரதேச அரசின் அரசாணை வெளி வந்ததுமே சில மால் நிறுவனங்கள் இறைச்சிக்கென்று தனிப் பகுதியையே அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிஜேபியின் ஆட்சி அதிகாரம் வலுக்க வலுக்க சாதாரண மக்களின் வயிற்றில்தான் அடி விழும் – எச்சரிக்கை.