பாஜகவுடன் கூட்டணி எக்காலமும் கிடையாது : நிதிஷ்குமார்

1 Min Read

அரசியல்

பாட்னா, அக்.23  மீண்டும் பாஜகவுடன் இணைந்து செயல்படும் எண்ண மில்லை என்று திட்ட வட்டமாக மறுத்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மோதிஹாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள் ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைகழகத் தின் பட்டமளிப்பு விழா வில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 19.10.2023 அன்று கலந்து கொண் டார். அவர் பேசும் போது மேடையில் இருந்த பாஜகவைச் சேர்ந்த தலை வரைச் சுட்டிக்காட்டி, “இங்கே இருக்கும் அனை வரும் எங்கள் நண்பர்கள். நான் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் என்னுடன் இணைந்து இருப்பீர்கள்” என்று பேசினார். பீகாரின் முதலமைச்சரின் இந்தப் பேச்சினைத் தொடர்ந்து, நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் சாயப்போவதாக ஊடகங் களில் ஊகங்கள் வெளி யாகின. இந்த ஊகங்கள் அனைத்தும் பொய் என்று 21.10.2023 அன்று தெளிவுபடுத்தியுள்ள அவர், தனது பேச்சு தவறாக புரிந்து கொள் ளப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அங்கு மேடையில் (பட்ட மளிப்பு  விழாவில்) இருந்த வர்களிடம் பீகார் மாநில அரசின் பணிகளை மக்க ளிடம் நினைவுபடுத்த வேண்டும். இல்லையென் றால் மக்கள் அதை ஒன் றிய அரசு செய்யதாக தவறாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூற விரும்பினேன்” பா.ஜ.க.வுடன் கூட்டணி எக்காலமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *