தென் மாவட்டங்களில் கடும் மழை – வெள்ளப்பெருக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,டிச.18- கனமழை காரணமாக நெல்லை, தென் காசி, தூத்துக்குடி மற்றும் கன் னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (18.12.2023) பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தொடர்ந்து மழை பொழிந்து வருகின்ற காரணத்தால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரண மாக தமிழ்நாட்டின் தென் மாவட் டங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (18.12.2023) நெல்லை உள்ளிட்ட 4 மாவட் டங்களுக்கு பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட் டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் மக்களும் தடையின்றி கிடைக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அதன் காரண மாக தாழ்வான மற்றும் வெள்ள அபாயம் நிலவும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. அதேபோல அண்ணா பல் கலைக்கழகம் மற்றும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகளும் இந்த 4 மாவட்டங்களிலும் ஒத்திவைக் கப்பட்டுள்ளது.
நெல்லை ஆட்சியர் அலுவ லக பகுதி வெள்ளத்தால் சூழப் பட்டுள்ளது. மேலும், குடி யிருப்பு பகுதிகள், சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இன்று இந்த 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசுப் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி உள்ளது.

இதே போல நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சாலைகள் மழை கார ணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது.
அதேபோல சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை இன்று கைவிடப்பட்டுள்ளது. நெல்லை ரயில் நிலையம் நீர் சூழ்ந்து காணப்படுவது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *