இஸ்லாமியர்கள் குறித்து மோசமான சித்தரிப்பு பா.ஜ.க. நபர் கைது

1 Min Read

மன்னார்குடி அக் 23  மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், மேல பணங்காட்டாங் குடியை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் மாற்று மதத்தினர் மனம் புண்படும்படி அவதூறாக சித்தரித்தும், பொது மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்திலும் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து கூத்தாநல்லூர் காவல்நிலையத்தில் முகமது சமீம் என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிவக்குமாரின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தனர்.இதை யடுத்து சிவக்குமாரை  கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *