சென்னை, டிச. 18– தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரிநீர் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான சோதனை ஓட்டம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் 2008இல் நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத் தொட ரில் அன்றைய முதலமைச் சர் கலைஞர் அறிவித்த படி, தாமிரபரணி ஆற்றி லிருந்து கடலில் உபரி யாக கலக்கும் 13,758 மில் லியன் கனஅடி வெள்ள நீரில், கன்னடியன் (தாமி ரபரணியின் 3-வது)அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிக ளுடன் இணைக்கும் திட் டத்துக்கு நிர்வாக ஒப்பு தல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதலமைச்சர் கலைஞ ரால் 2009 பிப்.21ஆ-ம் தேதி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட் டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தற்போது, முதல் 3 நிலைகளுக்கான பணிகளும்முழுமையாக முடிக்கப்பட்டு 4-வதுநிலைப்பணிகளும் முடியும் நிலையில் உள் ளன.
வெள்ளநீர்க் கால் வாய்: இதில், திருநெல் வேலியில் 67.1 கி.மீ., தூத் துக்குடியில் 8.10 கி.மீ., என மொத்தம் 75.2 கி.மீ நீளத்துக்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங் கள் (56,933 ஏக்கர்) பாசன வசதி பெறும். திருநெல் வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 பேரவை தொகு திகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 பேரவைத் தொகுதிகளும் பயன் பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிரா மங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத் தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன் பெறும்.
சோதனை ஓட்டம்: தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து, தாமிர பரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இத்திட்டத் தில் உபரிநீரை கொண்டு செல்வது குறித்து, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடி யன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இவ்வாறு உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட் டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளதால், வேளாண் பெருமக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள னர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.