போக்குவரத்து கழகங்களுக்கு பயணச் சீட்டு கருவி இலவசமாக வழங்க ஸ்டேட் வங்கி திட்டம்

viduthalai
1 Min Read

சென்னை, டிச. 18- போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச் சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயா ராக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 8 போக்கு வரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள் தோறும் 1.55 கோடிக்கும் அதிக மானோர் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு பயணச்சீட்டு வழங் கும் வகையில் மின்னணு பயணச் சீட்டு கருவிகள் 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட் டன. அதன் பின்னர் கடந்த 2011ஆ-ம் ஆண்டு அதி நவீனபயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது.
இத்திட்டம் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல் படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டன.

எனினும், புதிதாக வாங்கப் பட்ட கருவிகளில் பல்வேறு சிக் கல்கள் இருந்ததால் அவை திரும் பப் பெறப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்குவதற் கான நடவடிக்கைகளை போக்கு வரத்துத் துறை தீவிரப்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக உயர திகாரிகள் கூறியதாவது:

ஒரே அட்டையைப் பயன் படுத்தி பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் பய ணச்சீட்டு பெறும் வகையில் என்சிஎம்சி என்ற அட்டையை கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறி முகம் செய்தது. இந்த அட்டையை பிரபலப்படுத்த ஒன்றிய அரசு முனைப்புகாட்டி வருகிறது.
இதைப் பயன்படுத்த வேண்டு மானால் பொது போக்குவரத்தில் பயணச்சீட்டு கருவியின் பயன்பாடு அவசியம்.
எனவே, சுமார் 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகள் வரை போக்குவரத்துக் கழகங்க ளுக்கு இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளது.
இது வெற்றியடையும் பட்சத் தில் முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார். இந்த கருவி களுக்கான சர்வர், காகித பயன் பாடு மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கான செலவினங்க ளாக இருக்கும் என்று தெரிவித் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *