சென்னை. டிச.17- அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயிலினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். கழகப் பொதுச்செயலா ளர் வீ.அன்புராஜ் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் சென்று சேராத மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள், அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த ரூ. 6,000/- வழங்குவதற்கான பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், மழை வெள்ளத்தால் சளி, காய்ச்சல், தொற்றுகள் போன்றவற்றிலிருந்தும் மக்களை காக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த அரும்பணியில் பெரியார் மருத்துவக் குழுமம் தன்னையும் இணைத்துக் கொண்டு மருத்துவ முகாம்களை ஆங்காங்கே அமைத்து வருகின்றது. அதன்படி நேற்று (16.12.2023) சென்னை அமைந்த கரையில் சந்தைக்கடை வீதியையொட்டி உள்ள திருவீதி அம்மன் கோயிலில் காலை 10 மணிக்கு, மருத்துவ முகாமினை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடங்கி வைத்தார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதே நேரத்தில் நேற்று (16.12.2023) மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகர் பகத்சிங் தெருவில் அமைந்துள்ள ஊரக்காத்த பாளையத்தம்மன் கோயில் வளாகத்தில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் – குழந்தைகள் உதவி அறக் கட்டளை ( Child health foundation – Tamil Nadu Flood Relief) சார்பில் இப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன் தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன்னி லையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாம்பரம் தொகுதி செயலாளரும், சமத்துவ பெரியார் நகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவருமான மார்ஷல் மு.ரஞ்சன் மருத்துவ முகாம் மினை தொடங்கி வைத்தார். சிறப்பு இதய நோய் நிபுணர் ஹரிஹரன் மற்றும் மருத்துவர்கள் மருத்துவர் நந்தா, அருண் சங்கர், செவிலியர்கள் லோகசிறீ, மீனா, அபிநயா ஆகியோர் பங்கேற்றனர்.
மக்களின் அறியாமையைப் போக்கிய மருத்துவர்கள்!
பெரும்பாலும் பொது மருத்துவம் தான் செய்யப்பட்டது. ஆனால், மக்களிடம் இருந்த சில அறியாமைகள் இதன் மூலம் நீக்குவதற்கு வாசல் அமைத்துக் கொடுத்தது போல இருந்தது. டயாபடீஸ் பாதிப்பு உள்ளவர்கள் சிலர், பரிசோதனை செய் யாமலேயே தனக்கு அந்தக்குறைபாடு நீங்கிவிட்டது என்று சாப்பிட்டுவந்த மாத்திரையை நிறுத்தி இருக்கின்றனர். இத னால் மறுபடியும் அந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது தெரியாமலேயே இருந்து வந்துள்ளனர். இதை சரியாக சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்கினார் மருத்துவர் காந்தி மதி. இவரின் பெற்றோர் 1948 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் தலைமையில் ஜாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்ட வர்கள் என்பதை முகமலர்ச்சியுடன் சொல்லி, பெரியார் மருத்துவக் குழுமம் நடத்தும் இந்த முகாமில் நான் பங்கேற்றது எவ்வளவு பொருத்தம் என்பதுபோல் மகிழ்ந்தார்.
சிகிச்சையைத் தாண்டிய பயனுள்ள ஆலோசனைகள்!
அதேபோல், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவரை புற்றுநோய் மருத்துவ நிபுணர் தினேஷ், தான் பொதுமருத்துவர் அல்ல, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பதை அவருக்கு நினைவுபடுத்தி, சிகரெட் குடித்தால் இன்னின்ன நோய்கள் வரும் என்று எச்சரித்து, இந்தப் பழக்கத்தை போக்க, சிகரெட் குடிக்கும் எண்ணம் வரும்போது ஒரு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிடுங்கள் நன்மை கிடைக்கும் என்று சிகரெட் குடிக்கும் வழக்கத்தைப் போக்க எளிமையான ஆலோசனையும் சொன்னார். அவரும் புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றார். மருத்துவர் காந்திமதியிடம் சாமின் மேரி என்ற 6 வயது சிறுமி, வயிற்று வலி என்று வந்தார். அவரது தாய் ஜெனிஃபர் உடனிருந்தார். மருத்துவர் மிகுந்த கனிவுடன் 6 வயது சிறுமியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்து, காலையில் சரியாக சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். அவரது தாய், “அதுதான் டாக்டர் பிரச்சினை. சரியாகவே சாப்பிடுவதில்லை” என்று பதில் சொன்னார். காந்திமதி அத்துடன் விடவில்லை தொடர்ந்து பேசி, சாமின் மேரி தன் தம்பி விவின் நிக்கோலஸ் உடன் இரவு 1 மணி வரை விளையாடிவிட்டு பிறகு தூங்கி, அடுத்த நாள் காலை 8 மணிக்கு எழுகிறாள் என்பதை கண்டறிந்து, தாயைக் கடிந்துகொண்டார். “உடனடியாக அந்தப் பழக்கத்தை மாற்றி அவளை இரவு 9 மணிக்கெல்லாம் தூங்க வைக்க வேண்டும்” என்று உடனடி மருத்துவம் பார்த்ததோடு, எதிர்காலத்தில் இதுபோல் நேராதிருக்கவும் ஆலோசனை சொன்னார். ஒரு வயதான பெண், மூட்டு வலி என்று வந்தார். அவருக்கு உரிய சிகிச்சையும், ஆயின்மென்ட் டும் தரப்பட்டது. மற்றபடி சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, இரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற சிகிச்சைகள் தான் மக்களுக்கு பெரும்பாலும் தேவைப்படுகிறது. முகாமில் இல்லாத மருந்துகள் தளபதி பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் அமைந்தகரையில் உள்ள காமாட்சி மருந்தகத்தில் வாங்கித் தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மருத்துவமும், சுகாதாரமும்!
மருந்துகள் மட்டுமல்லாமல், சைல்ட் ஹெல்த் பவுண் டேசன் (Child Health Foundation), இந்தியா கேர்ஸ் (India Cares) ஆகியோர் இணைந்து வழங்கிய சானிட்டரி நாப்கின் கள் வழங்கப்பட்டன. முதலில் பெண்கள் அதை வாங்கிக் கொள்ளத் தயங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் தாங்களாகவே எடுத்துக் கொடுத்தவுடன், தயங்கியபடி வாங்கிக் கொண்டனர். சிறிது நேரம் சென்றதும், “எனக்குக் கொடுங்கள்”, “எங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துக் கொடுங்கள்” என்று விரும்பி வாங்கிச்சென்றனர். சிகிச்சைக்கு வந்து இதைப் பார்த்த ஆண்கள், “எங்கள் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். என்னிடம் கொடுங்கள்” என்று சானிட்டரி நாப்கினை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இரத்த சோகை இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து டானிக் வழங்கப் பட்டது. இந்த மருத்துவ முகாமில் பெண்கள் 83, ஆண்கள் 28, பெண் மழலையர் 9, ஆண் மழலையர் 12 என மொத்தம் 132 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தாம்பரம் மேற்கில் 96 பேர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மருத்துவர்கள்!
பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளரும், மருத்து வருமான ச.மீனாம்பாள் வழிகாட்டுதலில், சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் பா.யுவேதா, செவிலியர்கள் ஷபானா, ஆக்னஸ் மார்பகப் புற்றுநோய் நிபுணர்கள் மருத்துவர்கள் அரவிந்த், தினேஷ், சென்னை முகப்பேர் ராஜம் மருத்துவமனை மருத்துவர் சகிலா, எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் காந்திமதி, தேனி அரசு செவிலியர் கல்லூரியின் மேனாள் முதல்வர் பெரியார் செல்வி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு அமைந்தகரை மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.
பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள்!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், வழக்குரை ஞர்கள் தளபதி பாண்டியன், துரை அருண், நெல்லை நட ராஜன் மற்றும் அரும்பாக்கம் சா.தாமோதரன், இராமச்சந்திரன், முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, உடுமலை வடிவேல், சதீஷ், அயனாவரம் துரைராஜ், நா.பார்த்திபன், கிஷோர் ஆகியோர் பெரியார் தொண்டறம் அணி சார்பில் மருத்துவ முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.