எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி ஒடிசா வல்லுநர் குழு சென்னை வருகை

viduthalai
2 Min Read

சென்னை, டிச.17- வட சென் னையில் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேறிய பெட்ரோ லிய எண்ணெய்க் கழிவு, கொசஸ் தலை ஆற்றில் கலந்து கடலில் பரவியுள்ளது.
இதனால் மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாழாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளத்தில் கலந்து, வீடுகளுக்குள்ளும் எண்ணெய் கழி வுகள் படிந்து, பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன.
தற்போது முகத்துவாரப் பகுதி யில் எண்ணெய் கழிவு படலங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற் கொண்ட ஆய்வில், சென்னை பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தில் இருந்து கழிவுகள் வெளியேறி யதாக தெரிவித்திருந்தது.
இந்த எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற சுற்றுச்சூழல் துறை, வனத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர் பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து வல்லுநர் குழு 15.12.2023 அன்று சென்னை எண்ணூருக்கு வருகை தந்துள்ளது.

ஏற்கெனவே ட்ரோன் உள் ளிட்ட நவீன தொழில் நுட்பங் களுடன் அய்.அய்.டி. குழு எண்ணூ ரில் ஆய்வு மேற்கொண்டது குறிப் பிடத்தக்கது.
விரைவில் அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக் காக எடுத்து விசாரித்து வருகிறது. மேலும், எண்ணெய் கழிவுகளை விரைவாக அகற்ற தமிழ்நாடு அர சுக்கும், சிபிசிஎல் நிறுவனத்துக்கும் உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில், அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதும் பிறப்பித்த உத்தரவில், இன்று ‘‘டிசம்பர் 17ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு எண்ணெய் கழிவு களை அகற்ற வேண்டும். 18ஆம் தேதி நடை பெறும் அடுத்த விசாரணையின் போது, அது தொடர்பான அறிக்கையை சிபிசிஎல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகி யவை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *