காவல்துறையின் மூடநம்பிக்கை குற்றங்கள் குறைய கோவிலுக்கு காவடியாம்!

1 Min Read

நாகர்கோவில், டிச.17- குற்றங்கள் குறைய வேண்டி கோவிலுக்கு காவல் துறையினர் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனராம்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது.
இந்த ஆண்டு 15.12.2023 அன்று நடந்த காவடி ஊர்வலத்தில் யானை கள் இல்லாததால் காவல் நிலையத்திலி ருந்து காவல் துறையினரும், பொதுப் பணித்துறை சார்பில் ஊழியர்களும் பால் குடத்தை தலையில் சுமந்தபடி தக்கலை பொதுப் பணித்துறை சார்பிலும், குற்றங்கள் குறைய வேண்டியும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் மக்கள் வாழ வேண்டியும் தக்கலை காவல் நிலையம் சார்பிலும் வேளிமலைமுருகன் கோவிலுக்கு
அதிகாரிகளும், காவல்துறையினரும் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் பசி, பட்டினி இன்றி வாழ வேண்டியும் காவடி எடுத்து செல்வது வழக்கம் என்று கூறிக்கொண்டு, அதன்படி 15.12.2023 அன்று தக்கலை காவல் நிலையம் சார்பில் 2 புஷ்ப காவடி யும், ஒரு பால் குடமும் எடுக்கப் பட்டதாம். விரதமிருந்த காவல்துறையினர் காவடிகளை தோளிலும், பால் குடத்தை தலையிலும் சுமந்த படி செண்டை மேளம் முழங்க சென்றன ராம். இப்படியும் ஒரு மூடநம்பிக்கை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *