மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.12.2023) அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடி சாலை, சசி நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.அசன் மவுலானா, மாநகர ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.