பாம்பன் பகுதியில், திடீரென உள்வாங்கிய கடல்

viduthalai
1 Min Read

ராமநாதபுரம்,டிச.17- கடல் உள்வாங்கியதால், அப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. அத்துடன், பாறைகள், கடல் புற்கள் ஆகியவை வெளியே தெரிந்தன.
காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல்நீர் உள் வாங்கியுள்ளது என்றும், சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் நீதிமன்றம் மூலம்
503 வழக்குகளுக்கு தீர்வு
சென்னை,டிச.17- சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறுவழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அந்த நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஜெ.சிறீதேவி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜெ.சிறீதேவி தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில், ஏராளமான சிறு வழக்குகள் சமசர தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு விசாரணைக்கு பட்டிய லிடப்பட்டன.
விசாரணை முடிவில் மொத்தம் 503 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.23 கோடியே 86 லட்சத்து 66 ஆயிரத்து 386 வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *